புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
கதிர்காமத்திலிருந்து கண்டி – நுவரெலியா பிரதான வீதி ஊடாக கொழும்பை நோக்கி பயணித்த இபோச பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பஸ் வீதியை விட்டு விலக பாரிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.