காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மீது இஸ்ரேலிய படைகளினால் துப்பாக்கிச் சூடுகள் நடத்தி உணவு விநியோக தளங்களுக்கு இடையூறு விளைவித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தன. இதைக் கண்டித்து ஐ.நா அதிகாரிகள் மற்றும் சர்வதேச உரிமைகள் குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தன.
இஸ்ரேலிய இராணுவத்தால் உதவி மைய தாக்குதல்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காசாவில் செயல்படும் மேற்படி அமைப்பிற்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர்களை உதவித் தொகையாக வழங்க உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாயன்று தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் உதவி விநியோக முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு நிதியுதவி அளிப்பது இதுவே முதல் முறை என்று அறியப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், முன்னர் GHF மீதான நடவடிக்கையை "மனிதாபிமான உருமறைப்பு" மற்றும் "இந்த இனப்படுகொலையின் ஒரு அத்தியாவசிய தந்திரம்" என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்