அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில் ஈரானுக்கு முதல் அடி விழுந்துள்ளது. ஈரானின் பயன்பாட்டில் உள்ள நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஈரானுக்கு பெரிய அளவில் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றம், சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ தொடங்கின.
குறிப்பாக டொலருக்கு நிகரான ஒவ்வொரு நாடுகளின் நாணய மதிப்பு என்பது ஏற்றம், இறக்கத்தை அடைந்தன. அந்த வகையில் ஈரான் நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரானில் பணம் ரியால் என அழைக்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் வெற்றியை நோக்கி சென்ற நிலையில் டொலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக சரிந்துள்ளது. இந்த சரிவு வரலாற்றிலேயே முதல் முறையாகும். கடந்த ஜூலை மாதம் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற போது, டாலருக்கு நிகரான ரியால் 584,000 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது703,000 என்ற அளவில் சரிந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு தான். இருநாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. அதோடு டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்.