ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது.
லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இது தொடர்பில் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே Mark Rutte இதுவரை உறுதிப்படுத்தவில்லை, எனினும், ஈரான் அத்தகைய ஆற்றலை அடைவதற்கு மிக நெருக்கமான நிலையில் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது சர்வதேச பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதுகுறித்த மேலதிக ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம்வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஈரான் வசம் இருப்பது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது.