பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார்.
அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார்.
பின்னர் 1979-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார்.
நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர்.
இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும்.
இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால் மதிக்கப்படும் முக்கியமான திரைப்பட ஆளுமையாகத் திகழ்கிறார்.
அவரது மறைவுக்கு திரையுலகத்தின், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் அனுதாபகங்களை தெரிவித்துவருகின்றனர்.