2008 ஆம் ஆண்டின் மும்பை மகாராஷ்டிராவில் நிகழ்ந்த தொடர் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனரும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
லாகூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அதிக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஜமாத்-உத்-தவா அதிகாரி ஒருவர் கூறினார். ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான மக்கி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் 2020 பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்..
2023 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையால் மக்கி ஒரு உலகளாவிய பயங்கரவாதியாக நியமிக்கப்பட்டார், அவர் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்தப்பட்டார்.
2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களினால் 175 பேர கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்.