காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் , ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.
எனினும், இஸ்ரேலில் சிலர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர். ஹமாஸை முழுமையாக அழித்தொழிக்கும் வரை நெதன்யாகு போர் நிறுத்தத்தை செயல்படுத்தக் கூடாது என்று அந்த அமைப்பினர் முழங்கி வருகின்றனர்.
அதேவேளை, இரு தரப்பினரும் போர் நிறுத்த விதிமுறைகளை மதித்து செயல்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் பிராந்திய அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.