வில் அம்புகளால் சரமாரி தாக்குதல் - ஐவர் பலி

World 2 ஆண்டுகள் முன்

banner

நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்களை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.





நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.





இதனால் குறைந்தபட்சம் ஐவர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரைபொலிஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியது தனிநபர்தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.