இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - இதுவரை 348,909 பீசீஆர் பரிசோதனைகள்

banner

இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றுவரையில் 5 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 3 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர் .13 பேர் உயிரிழந்துள்ளனர்.





ஆயிரத்து 800 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. திவுலப்பட்டிய கொரோனா கொத்தணிமூலமே இதுவரையில் ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்றும் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன.