'தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் நிச்சயம் கிடைக்கும்'

banner

இலங்கை தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகள் நிச்சயம் கிடைக்கும் என இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர் டி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.





ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,





இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழருக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.





தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகளும் நிச்சயம் கிடைக்கும். ஐ.நா. பொதுச் செயலாளரை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சந்தித்தபோது கூட, தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து உறுதி செய்திருக்கிறார்.





விரைவில் மாகாணத் தேர்தலும் நடக்கும் என அவர் உறுதிபடக்கூறியுள்ளார்.