'ஜோசப் ஸ்டாலின் புலியாம்'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் - என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.





அதிபர் - ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.





" எமது இராணுவத்தினர் மக்களை கொன்றனர் எனக்குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச்சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியை சேர்ந்தவர்.





அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்வி கட்டமைப்பை குழப்புகின்றனர்." - என்றும் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.





அதேவேளை, பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இதனை ஏற்கமுடியாது. வலயக்கல்வி பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம் - என்று அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.