புதிய அரசமைப்பு ஜனாபதியிடம் எப்போது கையளிக்கப்படும்?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவானது, புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.





அதன்பின்னர் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான வாய்ப்பு எமக்கு உருவாகும்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.





நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் உள்ளது. சகல தரப்பினரினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச தலைமை முடிவெடுக்கும்." -என்றார்.