முப்படையினருடன் வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து மாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.





யாழ். பொலிஸ் நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்த ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.





வடக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள், செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் இதன்போது ஆராயப்பட்டது.





வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்ந்தார்.