ஆஸ்திரேலியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை சுற்றிவரும் சீன ஆராய்ச்சி கப்பல் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரப்புகள் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன.
இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் கேபிளை ஒரு “உளவு கப்பல்" கண்காணித்து வருவதாக வெளியான செய்திகள் தொடர்பில் பிரதமரிடம் இன்று கேள்விகள் எழுப்பட்டன.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த கப்பல் நியூசிலாந்தில் ஒரு கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், தற்போது ஆஸ்திரேலியாவின் கடற்கரையைச் சுற்றி பயணிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் திகதியே குறித்த கப்பல் சீனாவை சென்றடையவுள்ளதெனவும், இது உளவு கப்பலாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கப்பலை ஆஸ்திரேலியா கண்காணித்துவருகின்றது.