தனது மூன்று பிள்ளைகள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி வடமேற்கு பகுதியிலேயே இன்று அதிகாலை இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 வயது மகன், 13 மற்றும் 16 வயது மகள்கள்மீதே 46 வயதுடைய தாய் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
மூன்று பிள்ளைகளில் ஒருவர் மாற்று திறனாளியென தெரியவருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளையிலேயே அவர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அலறல் சத்தம் கேட்ட பிறகு எழுந்த தந்தை, குறித்த பெண்ணை பிடித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பிள்ளைகள்மீது தாக்குதல் நடத்திய தாய் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் உள்ளார். அவர் தன்னை தானே வெட்டிக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.