அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்குரிய நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதியின் இந்த அணுகுமுறை குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் பிரகாரம் வடகொரியா செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு அவசியம் என வடகொரிய ஜனாதிபதி கருதுகின்றார்.
அதேவேளை, தென்கொரியாமீது அண்மைய நாட்களில் குப்பை பலூன் தாக்குதலை வடகொரியா நடத்திவருகின்றது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராய விசேட கூட்டமொன்றை நடத்துமாறு தென்கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.