பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது கொக்கைன் போதைப்பொருள் வாங்க முற்பட்டார் எனக் கூறப்படும் தமது நாட்டு ஹாக்கி விளையாட்டு வீரருக்கு, ஆஸ்திரேலியா 12 மாதகால தடையை விதித்துள்ளது.
நெதர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கொக்கைன் வாங்க முற்பட்டபோது பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடும் எச்சரிக்கையுடன் குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், 29 வயதான குறித்த விளையாட்டு வீரருக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
தவறான நடத்தை உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.