உக்ரைன்மீது போர் தொடுப்பதற்கு ரஷ்யாவுக்கு, ஈரான் வழங்கிவரும் ஆதரவை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
உக்ரைன்மீதான தாக்குதலுக்கு ஈரானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ballistic
ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்திவருகின்றது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் ஈரான் கூட்டானது ஆபத்தான விளைவுகளுக்கே வழிவகுக்கும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா தொடுத்துள்ள சட்டவிரோத போரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவுக்கு ஏவுகணை வழங்கியுள்ளதால் தமது நாட்டு வன்பரப்பில் ஈரான் விமானங்கள் பறப்பதற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. அத்துடன், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ஈரானுக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.