காசாவில் அகதிகள் புகலிடம்மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் மனிதாபிமான சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உடனடி போர் நிறுத்தத்துக்கும் அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
கிழக்கு காசாவில் பாடசாலையொன்று அகதிகள் புகலிடமாக பயன்பட்டுவந்தது. இந்நிலையில் அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அமெரிக்காவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.