சிட்னி Blue Mountains பகுதியில் தனது இரு மகன்மாரை கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் தாய், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
9 மற்றும் 11 வயதுகளுடைய தனது மகன்மாரையே இவர் கொலை செய்திருந்தார். அத்துடன், தனக்குதானே காயத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். கடந்த செவ்வாய்கிழமையே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குறித்த பெண், பரமட்டா நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவர் இன்று பிணைகோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவில்லை. நவம்பர் மாதம் வழக்கு விசாரணை இடம்பெறும்வரை அவர் காவலில் இருப்பார்.