குவாட் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறுக்கின்றது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வாஷிங்டன் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
குவாட் கூட்டணியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கான வியூகமாக இது கருதப்படுகின்றது. அதேபோல சீனாவின் பிரசன்னத்தை தடுப்பதற்கான கூட்டணியாகவும் கருதப்படுகின்றது.
குவாட் மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விருந்தளிக்கவுள்ளார். அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.