குயின்ஸ்லாந்தில் 17 வயது சிறுமியொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் வுட் என்ற 34 வயது நபரொருவரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது இன்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பியோ பிஷப் என்ற சிறுமியே கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
விமானத்தில் பயணிப்பதற்கு அவர் ஆசனம் ஒதுக்கி இருந்தாலும் அன்றைய தினம் அவர் பயணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையம் நோக்கி அவர் சென்றார் எனக் கூறப்படும் காரை மட்டுமே பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவரை தேடுவதற்குரிய தேடுதல் வேட்டையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.