ஈரான் நாட்டின் மேலும் ஐந்து பிரஜைகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா பயணம் மற்றும் நிதித்தடைகளை விதித்துள்ளது.
ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் ஈரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
மாசா அமினி என்ற 22 வயது யுவதியே காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்தார்.
2022 ஆம் ஆண்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இற்றைக்கு ஈராண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் ஐவருக்கு எதிரான தடை அறிவிப்பை ஆஸ்திரேலியா விடுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கதுறை அதிகாரிகளை இலக்குவைத்தே பயண மற்றும் நிதித்தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை ஈரான் மனித உரிமை சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.