ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது தொடர்பில் ஆஸ்திரேலியா அவதானம் செலுத்தியுள்ளது.
ஜி - 7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் இது தொடர்பில் விரிவான பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
வத்திக்கானில் நடைபெற்ற பரிசுத்த பாப்பரசர் லியோவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்த பிரதமர் அல்பானீஸி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருடன் பேச்சு நடத்தினார்.
இதன்போது மேற்படி பாதுகாப்பு ஒப்பந்த யோசனை முன்மொழியப்பட்டது.
வெளிநாட்டு தலையீடு, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இராணுவப் பயிற்சிகள் மற்றும் பிற ஒத்துழைப்பு என்பன மேற்படி ஒப்பந்தத்துக்குள் உள்ளடங்குகின்றன.
இந்த யோசனை தொடர்பில் ஆஸ்திரேலியா மௌனம் காத்து வந்தது. இந்நிலையிலேயே தற்போது கலந்துரையாட முன்வந்துள்ளது.
இந்த தகவலை பிரதமர் அல்பானீஸி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்விவகாரத்தைக் கையாளவுள்ளனர்.