டாஸ்மேனியா மாநிலத்தில் வடமேக்கிலுள்ள கிராமமொன்றில் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் வேளையிலேயே நபரொருவரால், அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சூத்திரதாரி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அதிகாரி மேற்கொண்ட பதில் தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் என தெரியவருகின்றது.