மேற்கு சிட்னி ரயில் நிலையத்துக்கு அருகே மூவர்மீது இன்று மதியம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பெண்ணொருவரும், இரு ஆண்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
முகமூடி அணிந்த இருவரே துப்பாக்கிச்சூகூட்டை நடத்திவிட்டு வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தை மாநில பிரிமீயர் வன்மையாகக் கண்டித்தார். விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. சம்பவத்தின் பின்புலம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.