தென்மேற்கு சிட்னியில் 17 வயது சிறுமியொருவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நான்கு இளைஞர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் இறுதியில் இரு இளைஞர்களும், இரு சிறுவர்களும் இணைந்து குறித்த சிறுமியை 6 மணிநேரம் கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியது.
வன்கொடுமைக்கு பிறகு சிறுமியை வாகனத்தில் இருந்து தரையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி 16 வயது சிறுவனொருவரை கைது செய்தனர். இவர்மீது 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்பின்னர் 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 18 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது 9 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.