ஆஸ்திரேலிய அரசாங்கம் முதன்முறையாக ரஷ்ய கடற்படையிலுள்ள 60 கப்பல்கள்மீது தடைகளை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் எரிபொருளை இரகசியமாக எடுத்துச்செல்லும் நிழல் கடற்படை கப்பல்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையின் பிரகாரம் மேற்படி கப்பல்களை வெளியேற்றவும், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்கும் முழு உரிமையும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது.
உக்ரைன்மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவுக்கு பல தடைகளை ஆஸ்திரேலியா இதற்கு முன்னரும் விதித்துள்ளது. எனினும், இப்படியொரு தடை விதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
'உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், அதன் ஆக்கிரமிப்புக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனை சீர்குலைக்கவும் நாங்கள் ஒருங்கிணைந்த மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை தொடர்ந்து எடுப்போம்" என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.