அடுத்த இரு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை.
எந்தவொரு ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஈரானில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்டெடுப்பது தொடர்பில் லேபர் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
வெளியேற விண்ணப்பித்துள்ள ஆஸ்திரேலியர்களை, அஜர்பைஜான்வரை தரைவழியிhக அழைத்துவந்து, அங்கிருந்து விமானம்மூலம் ஆஸ்திரேலியா அழைத்துவருவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து வெளியேற 2 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.