நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 72 மணி நேரத்துக்குள் மாத்திரம் வீPதி விபத்துகளில் ஆறுபேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக ஹன்டர் பகுதியில் மாத்திரம் மூவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயது பெண், 28 வயது பெண் மற்றும் அவரின் கருவில் இருந்த குழந்தை என்பனவே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதே மிக மோசமான விபத்துகள் பதிவாகி வருகின்றன எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஆஸ்திரேலியாவிலுள்ள சாலைகளில் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துகளில் ஆயிரத்து 337 பேர் பலியாகியுள்ளனர். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.8 சதவீத அதிகரிப்பாகும்.