இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியாவின் ஆளுநர் பிரான்சிஸ் அடம்சன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் பேச்சு நடத்தினார்.
தெற்கு ஆஸ்திரேலிய ஆளுநரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் கல்வித் துறையில் பேணப்பட்டு வரும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி விசேடமாக நினைவு கூறினார் .
கல்விச் சீர்திருத்தம், தொழிற்பயிற்சி மற்றும் நிறுவன கூட்டாண்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மீதும் மேற்படி கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.
உயர்கல்வி கொள்கையை வலுப்படுத்துதல் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், தொழிற்கல்வியின் சீர்திருத்தங்கள் உட்படத் தொடர்ச்சியான கல்வி சீர்திருத்தங்கள் பற்றியும் ஆஸ்திரேலிய குழுவினருக்கு, பிரதமர் விவரித்தார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் சிரேஷ்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.