இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் ஏற்பட்டிருந்த போர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை.
இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில் போரில் தங்களுக்கே வெற்றியென இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மாறி மாறி கூறிவருகின்றன. ஈரானில் வெற்றிக் கொண்டாட்டங்கள்கூட நடத்தப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் மீண்டும் போர் ஏற்பட்டால்கூட தாக்குதல்களை நடத்துவதற்கு இரு தரப்புகளுமே தயார் நிலையில் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல், அவிவிலிருந்து 119 ஆஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம்மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து சில மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்வெளியை மூடின. இதனால் மேலும் சில ஆஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகின்றது.