சிட்னி மேற்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10.45 மணியளவிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு வளாகத்தில் வைத்தே 20 வயது இளைஞன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது.