ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
எனினும், இவ்வழைப்பை ஏற்பதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி மறுத்துள்ளார்.
பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பதற்கு நேட்டோ நாடுகள் தீர்மானித்துள்ளன. இதனை ஆஸ்திரேலியா முன்மாதிரியாக எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளால் இதனை செய்ய முடியும் என்றால் பசுபிக் பிராந்தியத்திலுள்ள நட்பு நாடுகளும் அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே பாதுகாப்பு செலவீனங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா சொந்த மீளாய்வின் அடிப்படையிலேயே முடிவெடுக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.