லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பேஜர்கள் வெடித்துச்சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் இவ்வாறு வெடித்துள்ளன.
பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்தவேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீன போர் பிராந்திய மோதலாக விரிவடையும் சூழ்நிலையை காண தாம் விரும்பவில்லை என்று ஆஸ்திரேலிய நிழல் வெளிவிவகார அமைச்சர் Simon Birmingham தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைதி நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்திவருகின்றது எனவும், அப்பாவி குழந்தைகள் உட்பட பொதுமக்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டதை ஏற்கமுடியாது எனவும் Simon Birmingham
குறிப்பிட்டுள்ளார்.