இரண்டு வயது வளர்ப்பு மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் 45 வயது நபருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவின் Western Downs
பகுதியில் இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையின் குறித்த நபர், குற்றவாளியென நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.
அவருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறுமிமீதான அவரது கொடூர செயல் பயங்கரமானது என உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுமிக்கான மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டுள்ளது எனவும், இது மிகக் கொடூரமான சம்பவம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபருக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தார். 20 ஆண்டுகள்வரை அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது. இதன்படி 2042 மார்ச் முதலாம் திகதியே அவர் பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாரான 32 வயது பெண் சித்திரவதை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.