ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா மோஸ்டின், இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஆளுநர் நாயகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரும், கலாநிதியுமான ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
அத்துடன், பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் ஆஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் ஆளுநர் நாயகம் பார்வையிடவுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் இவ்விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.