ஆஸ்திரேலியா, தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
சன்ஷைன் கடற்கரையின் உள்பகுதியில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடக்கே நியூ சவுத் வேல்சில் உள்ள ராக் ஹாம்ப்டன் வரையும், தெற்கு பகுதியில் க்ளென் இன்னெஸ் வரையும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களிலும், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம் இருந்த போதிலும், உயிரிழப்புகள் அல்லது வேறு ஏதேனும் சேதாரங்கள் இருந்ததா என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.