சிட்னியில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கொலையாளியை பொலிஸார் தேடிவருகின்றனர்.
39 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார். 31 வயது நபர் காயமடைந்துள்ளார்.
இது இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்த 31 வயது இளைஞன் குற்றப்பின்னணி கொண்டவர் என தெரியவருகின்றது.
அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதிக்கு வெளியிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.