வாகனம் மோதி தந்தையும், மகனும் உயிரிழந்த பெருந்துயர் சம்பவம் பிரிஸ்பேனில் இடம்பெற்றுள்ளது.
ரீஜண்ட்ஸ் பார்க்கில் உள்ள கிரீன் சாலையில் வைத்தே வாகனம் மோதியுள்ளது. இதில் 33 வயதான தந்தையும், நான்கு வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் ஐஸ்கிறீம் வாங்குவதற்காக சென்றுகொண்டிருந்தவேளையிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
41 வயதான வாகன சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.