மெல்பேர்ணில் வீடொன்றில் நடந்த விருந்துபசாரத்தின்போது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இளைஞர்கள் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
18 மற்றும் 24 வயது இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தாக்குதல் நடத்திவிட்டு குறித்த குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த குழுவில் இருந்தவர்களை தாம் அறிந்திருக்கவில்லை என்று பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெறுகின்றது.