பயங்கரவாத இலக்குகள்மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தெற்கு லெபானில் வசிப்பவர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்படும் பகுதிகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் சேமித்து வைத்துள்ள இடங்கள் மற்றும் தாக்குதலுக்காக பயன்படுத்தும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானில் சில பகுதிகளில் இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் சிலர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ஹிஸ்புல்லா அமைப்பினரின் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் வாழும் ஆஸ்திரேலியர்களை தாயம் திருப்புமாறு ஆஸ்திரேலியா ஏற்கனவே பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.