பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆஸ்திரேலிய பெண்ணொருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Cigdem Aslan என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் பிரிவினைவாதக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவில் இவர் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
துருக்கியின் தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் இஸ்தான்புல் பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரமே கடந்த சனிக்கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை அதிகாரிகள் அவரை தொடர்ச்சியாக கண்காணித்துவந்துள்ளனர், இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு தயாரானவேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு துருக்கியில் PKK எனப்பம் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, தன்னாட்சி மாநிலத்துக்காக போராடுகின்றது.
துருக்கியிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ளது.