சிட்னி Marrickville சாலை பகுதியில் நபரொருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நேற்றிரவு 7.40 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயது நபரொருவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு அவசர சேவை பிரிவினர் சிகிச்சையளித்தாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பியோடும் காட்சிகள் சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
குறித்த சம்பவத்தையடுத்து Marrickville பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.