குற்றப்பொறுப்பு வயதெல்லையை 14 ஆக அதிகரிப்பது தொடர்பில் வழங்கப்பட்டிருந்த உறுதிமொழியை விக்டோரிய மாநில அரசு மீறியுள்ளமை தொடர்பில் பூர்வக்குடி அமைப்பு பிரதிநிதிகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது சிறார்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இளைஞர் நீதி சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை விக்டோரிய மாநில பிரீமியர் Jacinta Allan இன்று அறிவித்தார்.
குற்றப் பொறுப்பின் வயதெல்லை 12 ஆகவே தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொலை, பயங்கரவாதம் மற்றும் கடுமையான குற்றங்கள்தவிர ஏனைய செயல்களுக்கான குற்றப் பொறுப்பு வயதெல்லை 10 இல் இருந்து 12 ஆக அதிகரிக்கப்படும் எனவும், 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு அது 14 ஆக அதிகரிக்கப்படும் எனவும் மாநில பிரீமியராக இருந்த டேனியல் ஆண்ட்ரூஸ் உறுதியளித்திருந்தார்.
லேபர் ஆட்சி நடைபெறும் விக்டோரியா மாநிலத்தில் பதவி துறந்ததையடுத்து புதிய பிரீமியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.