ஆஸ்திரேலியிhவில் வாழும் இந்திய சமூகத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய செனட்டர் ஜெசிந்தா நன்பிஜின்பா, நிழல் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்திய சமூகத்திடம் மன்னிப்புகோர மறுத்ததையடுத்தே அவரை நிழல் அமைச்சரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே நீக்கியுள்ளார்.
வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு முழுவதும் ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா' என்ற பெயரில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் லிபரல் கட்சி கட்சியின் செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ்,
“பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான லேபர் கட்சி, வாக்கு வங்கிக்காக இந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிக்கிறது’’ என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இவரது இந்தக் கருத்து ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜசிந்தா மன்னிப்பு கோர வேண்டும் என அவருடைய கட்சியினர் உட்பட பலர் வலியுறுத்தி உள்ளனர்.
அவர் அதனை ஏற்க மறுத்த நிலையிலேயே நிழல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.