காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும் தீவிரப்படுத்துமே தவிர, குறைக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, லெபனான் அடுத்த காஸாவாக மாறுவதை பார்க்க தாம் விரும்பவில்லை என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் உடன் வெளியேற வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், உடனடி போர் நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.