ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நிவ்யோர்க்கில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பிராந்திய பாதுகாப்பு, பூகோல அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இச்சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, மலேசியா, ஜப்பான் மற்றும் ஏனைய சில நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பேச்சுகளை நடத்தியுள்ளார்.