இலங்கைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு வலுவானது. கொழும்புடன் இணைந்து பணியாறாற்ற கன்பரா என்றும் தயாராகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு வெளிவிவகார அமைச்சர் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட எக்ஸ் தள பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
“ இந்தியப் பெருங்கடல் பங்காளிகள் என்ற வகையில், ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு வலுவானது மற்றும் நீடித்தது.
அமைதியான, நிலையான மற்றும் வளமான பிராந்தியத்தை வடிவமைக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் Penny Wong மேலும் குறிப்பிட்டுள்ளார்.