லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், சர்வதேசத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர், இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.
21 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
எனினும், இந்த அழைப்பை நிராகரித்துள்ள இஸ்ரேல் பிரதமர், போர் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சர்வதேசம் கூறுவதை கேட்குமாறு, இஸ்ரேல் பிரதமரை, ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு நிலைவரம் தொடர்பில் கன்பராவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, சர்வதேச விதிமுறைகளை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.